Pages

Wednesday, January 26, 2011

ஆன்லைன்

நம்மிடம் இருக்கும் jpg, gif, png மற்றும் அனைத்து விதமான
படங்களையும் எளிதாக ஆன்லைன் மூலம் இலவசமாக
பதிவேற்றலாம்.

இணையதள முகவரி : http://fumpr.com

Wednesday, January 19, 2011

பேஸ்புக் தகவல்

நண்பர்கள், உறவினர்கள் இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இன்று பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க்கிங் தளம் ஒரு இணைப்பு பாலமாக இயங்கி வருகிறது. பலர் தங்களுடைய போட்டோக்கள், அடுத்து கலந்து கொள்ளப்போகும் நிகழ்வுகள், குடும்பத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அன்றாட எண்ணங்கள் ஆகியவற்றை இதில் போட்டு வைக்கின்றனர். இவற்றை நண்பர்களும், உறவினர்களும் பார்த்து அறிந்து கொள்ள அனுமதியும் அளிக்கின்றனர்.

இந்த தகவல்களை எப்படி டவுண்லோட் செய்வது என்று இங்கு பார்க்கலாம். முதலில் பேஸ்புக் தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டில் லாக் ஆன் செய்து கொள்ளுங்கள். உள்ளே நுழைந்த பின்னர், Account என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் Account Settings என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Learn More என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைப்பதில் கீழிருந்து இரண்டாவதாக உள்ள Download Your Information என்பதில் கிளிக்கிடவும். நீங்கள் எது குறித்து கிளிக் செய்கிறீர்கள் என்பது குறித்து சிறிய விளக்கம் ஒன்று தரப்படும். இங்கு Download என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

இப்போது உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் திரட்டப்பட சிறிது நேரம் எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் நீங்கள் தந்துள்ள இமெயில் முகவரிக்கு, நீங்கள் விரும்பிய தகவல்கள் அடங்கிய சுருக்கப்பட்ட ஸிப் பைல், டவுண்லோட் செய்திடத் தயாராய் இருப்பதாக செய்தி கிடைக்கும். இங்கு கிளிக் செய்து, உங்கள் பாஸ்வேர்டை அடையாளம் உறுதி படுத்த பெறப்பட்ட பின், ஸிப் பைல் உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் ஆகும். படங்கள், போட்டோக்கள், பைல்கள் என அனைத்தும் சுருக்கப்பட்ட பைல் உங்கள் கம்ப்யூட்டரை வந்தடையும்.

மின்சாரம்

உலகளவில் கடந்த இருபது ஆண்டுகளில் மின்சக்தியின் தேவை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. மக்கள் பெருக்கத்தின் காரணமாகவும், தொழில் முன்னேற்றத்தினாலும் மின்சக்திப் பயன்பாடு கூடிக்கொண்டே போகிறது. சக்திக்கான இயற்கை மூலங்களான பெட்ரோலியம், எரி வாயுக்கள், நிலக்கரி போன்றவை தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. தற்போது பூமியில் புதைந்திருக்கும் நிலக்கரிப் படிவுகள், வரும் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று கணக் கிடப்பட்டுள்ளது.

நீர் மின்சார உற்பத்திக்கும் ஓர் அளவுண்டு என்பதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம். கோடைக் காலத்தில் அணைகளில் தண்ணீர் மட்டம் குறையும்போது நீர் மின்சார உற்பத்தியும் குறைந்துவிடுகிறது. எனவே செலவு குறைவாக உள்ளதும், தொடர்ந்து மின்சக்தியைத் தருவதுமான புதிய ஆற்றல் மூலத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறு அமைந்த புதிய வழிமுறைதான் கடலில் இருந்து மின்சக்தியை உற்பத்தி செய்வதாகும்.

அலை வீச்சு, கடலில் ஏற்படும் வெப்ப வேறுபாடுகள், ஆறுகள் கடலில் பாய்ந்து கலப்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ஆற்றலை நாம் இதுவரை பயன்படுத்திக்கொள்ளவில்லை. கடல் அலைகளில் இயங்கு ஆற்றலும், நிலை ஆற்றலும் அடங்கியிருக்கின்றன. அலை உயரும்போது நிலை ஆற்றலையும், விழுந்து பாயும்போது இயங்கு ஆற்றலையும் கொண்டிருக்கிறது. அலைகள் எழும்பித் தாழ்ந்து பாயும் பாய்ச்சலைப் பயன் படுத்தி, `டர்பைன்களை’ சுழலச் செய்து, ஜெனரேட்டர் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ட்பத்தை மின்சாரப் பொறியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

இவ்வாறு கடல் அலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் பிரான்ஸ் நாடு முன்னணியில் திகழ்கிறது. நம் நாட்டிலும் கட்ச், காம்பே போன்ற கடல் பகுதிகளில் இம்முறையைப் பின்பற்றி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. தற்போது உள்ள கடல் மின்சார உற்பத்திச் சாதனங்களை விட செலவு குறைவான, செயலாற்றல் அதிகமுள்ள சாதனங்களை உருவாக்கும் தொழில்ட்ப ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஜி.பி.எஸ். சாதனங்கள்

ஜி.பி.எஸ். (Global Positioning System) என்றழைக்கபடும் சாதனங்கள், சாட்டலைட்டின் உதவியுடன், நம்மை வழி நடத்தும் சாதனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது அவை தொழில் நுட்பத்தில் புதியதொரு புரட்சியையும், சாதனையையும் ஏற்படுத்தியதாக அறியப்பட்டன. அதன் பின்னர், பெரிய பளிச் என்ற திரைகளுடன், ஸ்மார்ட் போன்கள் வந்தன. ஜி.பி.எஸ். சாதன வசதிகளைக் குறைந்த விலையில் தரும் சாதனங்களாக இவை அமைந்தன. இவை இயக்குவதற்கு எளிதானதாகவும், ஜி.பி.எஸ். சாதனங்களைக் காட்டிலும் விலை குறைவாகவும் இருந்தமையால், மக்கள் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களையே அதிகம் நாடினார்கள்.

இதனாலேயே, ஜிபிஎஸ் சாதனங்களை வடிவமைத்த நிறுவனங்கள், நவீன தொழில் நுட்ப அடிப்படையில், கூடுதல் வசதிகளுடன் புதிய சாதனங்களைத் தரத் தொடங்கி உள்ளனர். அவற்றை இங்கு பார்க்கலாம். இணைப்பின்றி கூகுள் மேப்ஸ் : ஸ்மார்ட் போனில் ஜிபிஎஸ் வசதிகளைப் பெற மொபைல் இணைப்பு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அண்மையில் கூகுள் அறிவித்தபடி, கூகுள் மேப்ஸ் டேட்டாவினை ஸ்டோர் செய்து வைத்துப் பயன்படுத்தும். இதனால் எந்த இடத்திலும் இணைப்பு எதுவுமின்றி நாம் ஜிபிஎஸ் வசதிகளைப் பெறலாம். ஜிபிஎஸ் வசதியுடன் கேம்கார்டர்: ஜி.பி.எஸ். மூலம் ஜியோடேக்கிங் வசதி, அதாவது எந்த இடத்தில் நீங்கள் படம் எடுக்கிறீர்கள் என்ற தகவலைப் பதியும் வசதி, கிடைக்கிறது.

இப்போது வந்திருக்கும் தொழில் நுட்ப வசதி மூலம், ஜிபிஎஸ் வசதி கொண்ட கேமராவினை ஹெல்மெட் அல்லது உங்கள் சைக்கிளில் இணைத்து, படம் எடுத்து, பின்னர் அதனை கம்ப்யூட்டரில் இணைத்து, இடத்தைக் குறிப்பிட்டு இணைக்கலாம். காருக்கான பிளாக் பாக்ஸ்: தனியாகச் செயல்படும் ஜிபிஎஸ் சாதனங்கள், இனி அது இணைக்கப்பட்டுள்ள வாகனம், எங்கெல்லாம் செல்கிறது என்பதைப் பதிவு செய்து வைத்திடும். இதன் மூலம் ஒரு வாகனம் தற்போது எங்கிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். ஜிபிஎஸ் ஜாம்மர்: உங்களுடைய வாகனம் ஒரு ஜிபிஎஸ் சாதனத்தால் அறியப்படுவதனைத் தடுக்கும் ஜிபிஎஸ் ஜாம்மர்கள் சந்தைக்கு வர இருக்கின்றன.

இதனை உங்கள் காரில் இணைத்துவிட்டால், எந்த சாட்டலைட்டும் உங்கள் கார் நடமாட்டத்தினைக் கண்டறிய முடியாது. மிகச் சிறிய ஜிபிஎஸ் சாதனம்: வரும் காலத்தில், ஜிபிஎஸ் சாதனத்தை வைத்திட, அதிக இடம் ஒரு வாகனத்தில் தேவைப்படாது. பின்னால் உள்ளதைக் காட்டும் கண்ணாடியில் நான்கு அங்குலம் இருந்தால் போதும்; இதனைப் பொருத்திவிடலாம். உங்கள் மொபைல் போனுக்கான புளுடூத் இணைப்பும் இதில் கிடைக்கும். ஜி.பி.எஸ். தரும் வசதிகள் அடுத்த ஆண்டில் இன்னும் பலவாறாய் அதிகரிக்க இருக்கின்றன. இதனால், நம் நண்பர்கள் உலகம் இன்னும் சிறியதாக மாறி, அனைவரும் ஒருவருக்கொருவர் இணைப்பில் இருக்க இந்த சாதனங்கள் உதவும்.

பச்சை வாழைப்பழம்

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதப்பேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும்.

* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல்படலாம்.

செல்போன் எண் மாறாத வசதி 20.01.2011

செல்போன் எண் மாறாத வசதி; 20.01.2011 முதல்

செல்போன் நிறுவனத்தின் சேவைக்கு மாறினாலும் அதே செல்போன் எண்ணை வைத்துக் கொள்ளும் வசதி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள செல்போன் வாடிக்கையாளர்கள், தங்களுடைய செல்போன் நிறுவன சேவை செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டால் வேறு செல்போன் நிறுவன சேவைக்கு மாறுகின்றனர். அப்படி மாறினால் அவர்களுடைய செல்போன் எண்களையும் மாற்ற வேண்டியது இருக்கிறது.

அதனால், சேவை குறைபாட்டை சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த நிலையில், வேறு செல்போன் நிறுவனத்துக்கு மாறினாலும் அதே செல்போன் எண்ணை தொடர்ந்து வைத்துக் கொள்ளும் வசதியை அறிமுகம் செய்வதாக தொலைத்தொடர்பு துறை அறிவித்தது. நீண்ட நாட்களாக இது குறித்த எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் நீடித்து வந்தது. இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் மட்டும் கடந்த நவம்பர் 25-ந் தேதி அன்று இத்தகைய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில், நாளை (வியாழக்கிழமை) முதல் இந்தியா முழுவதும் இந்த வசதி அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில், `தொலைத்தொடர்பு செல்போன் எண்களை மாற்றாமல் சேவை நிறுவனங்களை மட்டும் மாற்றம் செய்யும் வசதி, நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு சேவை பகுதிகளிலும் ஜனவரி 20 முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக, தொலைத்தொடர்பு மொபைல் போன் எண்கள் தொடர்பான ஒழுங்குமுறை விதி 2009-ல் உள்ள பிரிவுகள் மாற்றம் செய்யப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய மாற்றம் காரணமாக, செல்போன் நிறுவனங்களுக்குள் தரமான சேவையை அளிப்பது குறித்த போட்டியும் மேம்பாடும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய முறையை தொடர்ந்து பிரிபெய்டு வாடிக்கையாளர்களில் 17 சதவீதம் பேரும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களில் 19 சதவீதம் பேரும் தங்களுடைய செல்போன் சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்வார்கள் என தொலைத்தொடர்பு வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Monday, January 10, 2011

20 மடங்கு அதிகரிக்கும் சிப்!

20 மடங்கு அதிகரிக்கும் சிப்

நாம் இப்போது பயன்படுத்தும் வெர்சன் கம்ப்யூட்டர் வேகத்தை மிக பல மடங்கு அதிகரிக்கும் தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானி கள் ஆய்வு நடத்தினார்கள். அவர்கள் புதிய "சிப்" ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் கம்ப்யூட்டரை அதிவேகமாக செயல்பட வைக்க முடியும்.

பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள பிராசசர் மைக்ரோ "சிப்"பில் பொதுவாக 2 அல்லது 4 பாகங்கள் இருக்கும் சில "சிப்"களில் 16 பாகங்கள் வரை இருக்கும். இப்போது விஞ்ஞானி கள் உருவாக்கியுள்ள மைக்ரோ "சிப்"பில் 1000 பாகங்களை உருவாக்க முடியும்.

இதனால் இந்த கம்ப்யூட்டர் தற்போதைய கம்ப்யூட்டரைவிட 20 மடங்கு வேகமாக வேலை செய்யும். இது பெர்சனல் கம்ப்யூட்ட ராக இருந்தாலும் அதிநவீன கம்ப்யூட்டரை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும். இந்த கம்யூட்டர் இன்னும் சில வருடங்களில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

புற்றுநோயை ஏற்படுத்துகிறது
பிராணிகளிலிருந்து தருவிக்கப்பட்ட உணவுகளில் உயர்தர புரதங்களும் இன்னும் சில சத்துக்களும் இருந்தாலும் கூட அவை சில சமயங்களில் மரணத்திற்கு இட்டுச் சல்லும் அளவுக்கு அபாயகரமானவையும் கூட. சிவப்பு இறைச்சி புற்றுநோய்க்கு வித்திடும் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. சிவப்பு இறைச்சி, பெருங்குடல் ஆசன புற்றுநோய்க்கு இட்டுச் செல்லும் என்பதற்கு தக்க ஆதாரங்கள் உள்ளன. ஆகையால் சிவப்பு இறைச்சியைத் தவிர்க்குமாறும் பதனிடப்பட்ட இறைச்சிகளை முற்றிலும் தவிர்க்குமாறும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இறைச்சி உட்கொள்வதால் புற்றுநோய் ஏற்படுவது எப்படி? சிவப்பு இறைச்சிகளில் அளவுக்கு அதிகமான குருதிச்சிவப்பு இரும்பு (haem iron) இருக்கிறது. (உதா : இறைச்சி, இறைச்சி உணவுப் பொருட்கள், இரத்த உணவுப்பொருட்கள்). குருதிச் சிவப்பு அல்லாத இரும்புச் சத்து தாவர உணவுகளில் இருக்கிறது.

உதாரணம் :

(தானியங்கள், பீன்ஸ், காய்கறிகள், தௌபு, அத்தி, கொண்டைக்கடலை மற்றும் ஏப்ரிகோட்.) குருதிச் சிவப்பு இரும்பில் புற்றுநோயை வரவழைக்கும் என்-நைட்ரோசோ இருக்கிறது. இந்த வகை சிவப்பு குருதி இரும்பு டிஎன்ஏவுக்கு சேதத்தை விளைவித்து புற்றுநோய் செல் வளர்ச்சிகளுக்கு வித்திட்டு விடுகிறது.

சிவப்பு இறைச்சியில் உள்ள இந்த வகை இரும்பு பெருங்குடலில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. சமைக்கும் முறை சில வகை சிவப்பு இறைச்சிகள் அப்படியே நெருப்பில் அதிகமான சூட்டில் வாட்டி எடுக்கப்படுகின்றன.

இப்படி வாட்டி எடுக்கப்படும்பொழுது இந்த இறைச்சி கருகி புற்றுநோயை வரவழைக்கும் ஹேடேரோசைக்ளிக் எமைன் என்ற இரசாயனங்கள் வெளிப்படுகின்றன. தசை இறைச்சிகளான பன்றி, மாடு, மீன் போன்றவற்றை சமைக்கும்பொழுது ஹேடேரோசைக்ளிக் எமைன் வளிப்படுகிறது.

இதுவரைக்கும் சுமார் 17 விதமான புற்றுநோயை வரவழைக்கும் ஹேடேரோசைக்ளிக் எமைன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரசாயனங்கள் உருவாகுவதற்கு சூடு மிக முக்கியமான காரணமாகும். பொரித்தல், அணலில் வாட்டுதல், பார்பர்கியூ போன்றவை எல்லாம் மிகப் பெரிய அளவில் இந்த இரசாயனங்களை வெளிப்படுத்துகின்றன.

அவணில் வேகவைப்பது, பேக் செய்வது குறைவான சூட்டில் செய்யப்படுவதால் குறைவான அளவு ஹேடேரோசக்ளிக் எமைனையே வெளிப்படுத்துகின்றன. சூடு அதிகமாக இருக்கும் பொழுது ஹேடேரோசைக்ளிக் எமைனும் அதிகமாக வெளிப்படுகிறது.

கொழுப்பு விகிதம் இறைச்சியில் கெட்டி கொழுப்பு ஒமேகா-6 கொழுப்பும் அதிகமாக இருக்கிறது. இதற்கு புற்றுநோயை வரவழைக்கும் தன்மை உண்டு. நாம் இன்று உட்கொள்ளும் பெரும்பாலான இறைச்சிகளில் கெட்டி கொழுப்பு (கெட்ட கொழுப்பு) அதிகமாகவும், கெட்டி அல்லாத கொழுப்பு (ஆரோக்கியமான கொழுப்பு) குறைவாகவும் இருக்கிறது.

கொழுப்பின் அளவை விட எந்த ரகத்தைச் சேர்ந்த கொழுப்பு என்பதே ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. பதனிடப்பட்ட இறைச்சிகள் நீங்கள் உட்கொள்ளும் சிவப்பு இறைச்சி வெகு நாட்களுக்குப் முன்பதாகவே அறுக்கப்பட்ட பதனிடப்பட்ட இறைச்சியாக இருக்கக்கூடாது.

இப்படிப்பட்ட இறைச்சியை நீங்கள் அறவே உட்கொள்ளக்கூடாது. இப்படிப்பட்ட சிவப்பு இறைச்சிதான் பெருங்குடல்-ஆசன புற்றுநோய்க்கு முதன்மையான காரணம். இறைச்சியைப் பதனிடும் பொருட்டு அதில் நைட்ரேட் என்ற இரசாயனத்தைச் சேர்க்கிறார்கள்.

இந்த நைட்ரேட் இறைச்சியைப் பதனிடவும், இறைச்சிக்கு வர்ணம் கொடுக்கவும், இறைச்சியின் சுவையைக் கூட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நைட்ரேட் நம்முடைய குடலுக்குள் புற்றுநோயை உருவாக்கும் வஸ்துவாக உருமாறுகிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியம் நைட்ரேட்டும் அதிகமாக இருக்கிறது. சோடியம் நைட்ரேட் அறவே உணவில் சேர்க்கப்படக்கூடாத ஒரு பொருளாகும். இறைச்சியின் துணை கொண்டு தயாரிக்கப்படும் சோசேஜ், ஹோட் டோக் போன்றவையும் இதே முறையில்த�ன் தயாரிக்கப்படுகின்றன.

சிவப்பு இறைச்சி, பதனிடப்பட்ட இறைச்சி மற்றும் பதனிடப்பட்ட இறைச்சியின் துணை கொண்டு செய்யப்படும் உணவுப் பொருட்களை பயனீட்டாளர்கள் ஒரு நாளைக்கு சுமார் 1.7 அவுன்ஸ் அளவில் உட்கொள்ளும்பொழுது பெருங்குடல்-ஆசன புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 21% அதிகரிக்கிறது.

முதல் மனிதன்

முதல் மனிதன்
உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான்' என, இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இதுநாள் வரையில், கடந்த இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன் என்ற இனத்தில் இருந்துதான் நவீன மனிதன் தோன்றினான் என்றும், முதன்முதலில் ஆப்ரிக்காவில் தோன்றிய இந்த ஹோமோ சேப்பியன் இனத்தவர் படிப்படியாக, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்பட்டு வந்தது.

சமீபத்தில், இஸ்ரேல் நாட்டில் உள்ள பென்-குரியான் விமான நிலையம் அருகில் இருக்கும் குகை ஒன்றில் (குசேம்), அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் உடல் படிவங்களை கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து டெல் அவிவ் பல்கலை விஞ்ஞானிகள் கூறியதாவது:

நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன்களின், உடல் படிவங்கள் "குசேம்' குகையில் கிடைத்துள்ளன. மனித பல் போன்றுள்ள இந்த படிமம் மத்திய "பிளைஸ்தோகின்' காலத்தை சேர்ந்தது.

இதை ஆய்வு செய்ததில், உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான் என தெரிய வந்துள்ளது. மேலும், மேற்கு ஆசியாவில் இருந்து தான் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளான்.இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.ஆப்ரிக்காவில் தான் முதல் ஹோமோ சேப்பியன் தோன்றினான் எனவும், உலகின் தாய்வீடு ஆப்ரிக்கா எனவும் கூறப்பட்டு வந்த நிலையில், இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகளின் புதிய முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம், நவீனகால மனிதனின் தோற்றம் குறித்த வரலாறு திருத்தி எழுதப்படும் என தெரிகிறது.

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 5

திருக்குறள்

Sivasithan வாசி யோகம் : திரு.நாகராஜன் ,தாசில்தார் நகர், மதுரை .

Sivasithan வாசி யோகம் : திரு.பிச்சைகனி ,லக்ஷ்மி புரம், மதுரை .

Sivasithan வாசி யோகம் : அனைவருக்கும் இனிய வணக்கம்

Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம்

அனைவருக்கும் வணக்கம் ,
நாம் நம் உடலை பாதுகாக்கவும் ,அந்த உடலை இயக்கும் உயிராகிய இறை வாசியை முறைபடுத்தினால் நமக்கு எந்த விதமான நோய்களும், நம்மை அணுகாமல் வாழ முடியும்.

இது உண்மை! நோய்கள் சில நம் உடம்பில் இருந்தாலும், அதையும் நாம் நாளடைவில் எந்த மருத்துவ முறைகளும் எடுத்துக் கொள்ளாமல் நாம், நம் உடலையும், உயிரையும் நலமடைய செய் வாசியோகமே சிறந்தது. .

இந்த வாசி யோகமுறையை முறையாக கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ முடியும் . இவ்வாறு நலமுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பல குடும்பங்களின் விவரம் கீழே.................

Sivasithan வாசி யோகம் : திரு.கந்தசாமி, சிந்தாமணி,மதுரை.

வாசியோகக்கலை

மதுரை-------சிந்தாமணி------சிவசித்தனின்
வாசியோகக்கலை

Sivasithan வாசி யோகம் : நாடுகளின் வருகை ...


Sivasithan வாசி யோகம் : ஸ்ரீ வில்வம் - கலந்துரையாடல் 2